Tuesday 27 June 2017

"குறைப் சம்பவம்" நடந்தது என்ன?

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - وَهُوَ ابْنُ جَعْفَرٍ - عَنْ مُحَمَّدٍ، - وَهُوَ ابْنُ أَبِي حَرْمَلَةَ - عَنْ كُرَيْبٍ،
أَنَّ أُمَّ الْفَضْلِ بِنْتَ الْحَارِثِ، بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا وَاسْتُهِلَّ عَلَىَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْتُ الْهِلاَلَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ - رضى الله عنهما - ثُمَّ ذَكَرَ الْهِلاَلَ فَقَالَ مَتَى رَأَيْتُمُ الْهِلاَلَ فَقُلْتُ رَأَيْنَاهُ لَيْلَةَ الْجُمُعَةِ ‏.‏ فَقَالَ أَنْتَ رَأَيْتَهُ فَقُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ ‏.‏ فَقَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلاَ نَزَالُ نَصُومُ حَتَّى نُكْمِلَ ثَلاَثِينَ أَوْ نَرَاهُ ‏.‏ فَقُلْتُ أَوَلاَ تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ فَقَالَ لاَ هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ  ﷺ
உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். “நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். “நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். “நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். “ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் “ஆனால் *”நாங்கள்”* சனிக்கிழமை இரவில்தான் பிறையைப் பார்த்தோம். எனவே *”நாங்கள்”* முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை அல்லது (மறு) பிறையைப் பார்க்கும் வரை *”நாங்கள்”* நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள். ''முஆவியா (ரலி) அவர்கள் (பிறை) பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், இல்லை (போதாது). நபிகள் நாயகம் () அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்; நூல்: முஸ்லிம் 1087, நஸாஈ 2111, அபூ தாவூத் 2332, திர்மிதீ 693
*ஷாமிலிருந்து மாத இறுதியில் மதீனாவுக்கு வந்த குறைபுக்கும் மதீனாவிலிருந்த இப்னு அப்பாஸ் (ரலி)க்கும் இடையே நடந்த உரையாடல்*
*இப்னு அப்பாஸ் (ரலி):* நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?
*குறைப்:* நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்
*இப்னு அப்பாஸ் (ரலி):* நீயே பிறையைப் பார்த்தாயா?
*குறைப்:*ஆம் (நான் பார்த்தேன்), மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்
*இப்னு அப்பாஸ் (ரலி):* ஆனால் *”நாங்கள்”* சனிக்கிழமை இரவில்தான் பிறையைப் பார்த்தோம். எனவே *”நாங்கள்”* முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை அல்லது (மறு) பிறையைப் பார்க்கும் வரை *”நாங்கள்”* நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்
*குறைப்:* முஆவியா (ரலி) (பிறை) பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?
*இப்னு அப்பாஸ் (ரலி):* இல்லை (போதாது). நபிகள் நாயகம் () அவர்கள் இப்படித்தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்
*இது ஹதீசல்ல!*
فَلاَ نَزَالُ نَصُومُهُ حَتَّى نُكْمِلَ الثَّلاَثِينَ أَوْ نَرَاهُ
இதுதான் நபி ஸல் அவர்களின் கட்டளை என்று இப்னு அப்பாஸ் சொல்வது. ஆனால் என்ன பிரச்சனை என்றால், இதற்கு முன் *"கால ரஸூலுல்லாஹ்"* என்று வரவில்லை. கால ரஸூலுல்லாஹ் என்று வருவது மட்டுமே ஹதீஸ் என்று அமைவாசைகளுக்கு சொல்லப்பட்டதால் அவர்களால் இதைத் தாண்டி சிந்திக்க இயலாது.
النَّبِيِّ   قَالَ ‏"‏ أَحْفُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى"‏
முஸ்லிம் 432. நபி () அவர்கள் கூறினார்கள்: “மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளரவிடுங்கள்.”
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இந்த ஹதீஸில் நபிகளாரின் வார்த்தையை அப்படியே அறிவிக்கிறார்கள் இப்னு அப்பாஸ்.
النَّبِيِّ   أَنَّهُ أَمَرَ بِإِحْفَاءِ الشَّوَارِبِ وَإِعْفَاءِ اللِّحْيَةِ
முஸ்லிம் 433. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி () அவர்கள் மீசையை ஒட்ட நறுக்குமாறும் தாடியை வளர்க்குமாறும் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸில் நபிகளாரின் கட்டளையை செயப்பாட்டு வினையில் அறிவிக்கிறார் இப்னு அப்பாஸ்.
முதல் ஹதீஸில் கால ரஸூலுல்லாஹ் () என்று நபிகளாரின் வார்த்தை அப்படியே இடம்பெற்றுள்ளது. இரண்டாம் அறிவிப்பில் நபிகளார் கட்டளையிட்ட விஷயங்கள் நேரிடையாக நபிகளாரின் வார்த்தைகளாக இல்லை. என்ன கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் சொல்கிறார்.
அமைவாசைகளின் விதிகளின் படி இரண்டாமவது அறிவிப்பு ஹதீசல்லாமல் போய்விடும்.
அவ்வாறல்ல.. இரண்டுமே ஹதீஸ்கள்தாம்...
இவற்றை தவிர மூன்றாமவதாக ஒருவகை அறிவிப்புகள் உள்ளன. அவை யார் கட்டளையிட்டார் என்று தெரியாமலேயே "நாங்கள் கட்டளையிடப்பட்டோம்" என்று மொட்டையாக இருக்கும்.
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَتْ كُنَّا نُؤْمَرُ عِنْدَ الْخُسُوفِ بِالْعَتَاقَةِ‏.‏
புகாரி 2520. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். “நாங்கள் சந்திர கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப்பட்டிருந்தோம்.”
இங்கே அஸ்மா அவர்களுக்கு கட்டளையிட்டது யார்? அவர் தந்தை அபூ பக்கர் ரலி யா? அவரது கணவர் சுபைரா? அல்லது நபிகளாரா?
நபிகளார்தான் கட்டளையிட்டார்கள். நாங்கள் கட்டளையிடப்பட்டோம் என்று சஹாபாக்கள் சொன்னால் அக்கட்டளையை பிறப்பித்தது நபிகளார் மட்டுமே. இந்த அடிப்படை தெரிந்திருக்க வேண்டும்.
மீசையை கத்தரிக்கும் விஷயத்தில் நபிகளாரின் வார்த்தை இல்லாமல் இப்னு அப்பாஸ் அறிவிப்பதாக (முஸ்லிம் 433) இருந்தாலும், நபிகளாரின் நேரடி வார்த்தை இருக்கும் (முஸ்லிம் 432) ஹதீஸ்கள் நமக்கு கிடைத்துள்ளன. எனினும் நபிகளாரின் நேரடி வார்த்தைகள் இடம்பெற்ற ஹதீஸ்களே கிடைக்காமல் நாங்கள் கட்டளையிடப்பட்டோம் என்ற தோரணையில் மட்டுமே நமக்கு ஒரு அறிவிப்பு கிடைத்தாலும் அதுவும் ஹதீஸ்தான். அஸ்மா ரலி அறிவிக்கும் சந்திர கிரகண ஹதீஸ் இவ்வகையை சார்ந்தது.
இனி.. இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு குறைப் ஹதீஸை அணுகுவோம்...
فَلاَ نَزَالُ نَصُومُهُ حَتَّى نُكْمِلَ الثَّلاَثِينَ أَوْ نَرَاهُ
"எனவே நாங்கள் எண்ணிக்கையை முப்பதாக முழுமையாக்கும் வரை அல்லது பார்க்கும் வரை நாங்கள் நோன்பு நோற்றுக்கொண்டு இருப்போம்"
هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ  
"இவ்வாறுதான் எங்களுக்கு நபி  ﷺ கட்டளையிட்டார்கள்"
இது குறைப் ஹதீஸில் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் கூற்றுக்கள். நபி  ﷺ கட்டளையிட்டார்கள் என்று இல்லாமல் நாங்கள் கட்டளையிடப்பட்டோம் என்பதே ஹதீஸாக ஏற்றுக்கொள்ளப்படும்போது, இங்கே என்ன கட்டளை மேலும் நபி  ﷺ தான் கட்டளையிட்டார்கள் என்று தெளிவாக இருக்கும்போது இது ஹதீஸ் இல்லையா.
மேலும்....
முஸ்லிம் 432 & 433 ஐப்போல நபிகளாரின் நேரடி வார்த்தைகள் உள்ள குறைப் ஹதீஸ் இருக்கிறதா என பார்ப்போம்...
அல்லாஹ்வின் தூதர் () அவர்கள் கூறினார்கள்:
மாதத்திற்கு இருபத்தி ஒன்பது இரவுகளாகும். எனவே, அதை (பிறையை)ப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டாலே தவிர *அதை (பிறையை)ப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள்.* அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால், *அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் எண்ணிக் கொள்ளுங்கள்.*
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1081/8
நீங்கள் அதை (பிறையை)க் காணும் போது நோன்பு பிடியுங்கள். *அதை (பிறையை)க் காணும் போது நோன்பு விடுங்கள்.* உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் *முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்'* என்று நபிகள் நாயகம் () அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1081/1
இந்த ஹதீஸ்களில் நபிகளார் நேரடியாக கட்டளையிடுகிறார்கள். "முன்னிலை 2nd person"
இதே ஹதீஸ்களை "தன்மை 1st person"இல் சொல்கிறார்கள் இப்னு அப்பாஸ் ரலி
எனவே நாங்கள் எண்ணிக்கையை முப்பதாக முழுமையாக்கும் வரை அல்லது பார்க்கும் வரை நாங்கள் நோன்பு நோற்றுக்கொண்டு இருப்போம், இவ்வாறுதான் எங்களுக்கு நபி  ﷺ கட்டளையிட்டார்கள்"
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ். (ரலி)
இவ்வாறு வாசித்தால் இது ஹதீஸ் என்பது விளங்கும்.
குறைப் சம்பவத்தில் இப்னு அப்பாஸ் அறிவிப்பது ஹதீஸே...
*மாத இறுதியில் வரும் தலைப்பிறை செய்தியை எப்படி எடுக்க முடியும்?*
மாத இறுதியில் வரும் தலைப்பிறை செய்தியை எப்படி எடுக்க முடியும்? அதானல் தான் குறைபின் செய்தியை இப்னு அப்பாஸ் ஏற்கவில்லை என்கின்றனர் சர்சதேச சவூதி பிறையாளர்கள். இதுவும் அரைகுறை சிந்தனை. கேள்வி கேட்ட இப்னு அப்பாசிற்கும் மாத இறுதி என்று தெரியவில்லை. பதில் சொன்ன, குறுக்கு கேள்வி கேட்ட குறைபுக்கும் அது மாத இறுதி என்று தெரியவில்லை. ஆனால் அப்படிப்பட்ட சர்ச்சையே இல்லாத உரையாடலில் மாத இறுதியில் செய்தி வந்ததால் தான் இப்னு அப்பாஸ் ஏற்கவில்லை என்று சவூதி பிறையாளர்களுக்கு மட்டும் தெரிந்துவிட்டது. “சாட்சி போதாதால்தான் இவர் ஏற்க மாட்டேன்கிறாரோ” என்ற தோரணையில் குறைப் சாட்சிகளை வலுப்படுதிகிறார். “சாட்சி இதுக்கும் சம்பந்தமே இல்லப்பா! ஷாம் பிறை ஷாமுக்குதான்! நபியின் கட்டளைப்படி நாங்களே பிறையை பார்த்து முடிவு பண்ணுவோம்பா!” என்ற தோரணையில் பதில் சொல்கிறார் இப்னு அப்பாஸ். மாத இறுதியில் செய்தி வருவதால் அதை எடுத்து எப்படி கடந்து சென்ற 28 நாட்களை மாற்ற முடியும் என்றிருந்தால் இந்த உரையாடலில் பங்கு பெற்ற அந்த இருவருக்கும் இது தெரியவே இல்லை என்று அர்த்தமாகிறது. அங்கே அந்த பிறையை எடுக்கலாம் என்ற வாய்ப்பிருப்பதால்தான் சர்ச்சையே வருகிறது. “நாங்கள் – நீங்கள்” என்ற வேறுபாட்டை ஹதீஸிலிருந்து கூறி பிறை செய்தியை மறுக்கிறார் இப்னு அப்பாஸ். இதுதான் அங்கே நடந்தது.
*குறைபின் சாட்சி மட்டுமே இருப்பதால் ஒரே ஒரு சாட்சி என்று இப்னு அப்பாஸ் எடுக்கவில்லையா?*
இங்கே ஒரே ஒரு சாட்சியல்ல எண்ணற்ற சாட்சிகள் உள்ளன. நம்பிக்கைக்குரிய குறைப் பார்த்துள்ளார். “அதை நீயே பார்த்தாயா” என்று கேட்டு உறுதி செய்கிறார் இப்னு அப்பாஸ். “நான் மட்டுமல்ல ஷாம் முஸ்லிம்கள் பார்த்தனர்” என்கிறார் குறைப். இங்கே எண்ணிக்கை சொல்லப்படவில்லை. பலர் பார்த்துள்ளனர். இருந்தும் இப்னு அப்பாஸ் அதை ஏற்கவில்லை. “முஸ்லிம்களின் தலைவரே பார்த்து நோன்பு பிடித்தாரே” என்று வலுவான சாட்சியை சொல்கிறார் குறைப். இருந்தும், இப்னு அப்பாஸ் ஏற்கவில்லை. சாட்சிதான் பிரச்சனை என்றால் “சாட்சி பத்தாது” என்று பதில் கொடுத்திருப்பார். குறைபின் பதில்களோ “சாட்சிகள்தான் வலுவாக இருக்கிறதே நீங்கள் ஏன் பிறை அறிவிப்பை ஏற்கமாட்டேன் என்கிறீர்கள்” என்ற தோரணையில் உள்ளது. ஆனால் இப்னு அப்பாஸின் பதில் சாட்சிகளை பற்றியே சட்டை செய்யாமல் “நாங்கள் பிறை பார்ப்போம்” என்கிறார். இங்கே “நாங்கள் – நீங்கள்” என்ற பிரிவினைதான் மேலோங்கி நிற்கிறது. சாட்சிகளை பிரச்சனையாக இப்னு அப்பாஸ் பார்க்கவில்லை.
குறைப் பார்த்தது போதாது! முஆவியா பார்த்தது போதாது!! மக்கள் அனைவரும் பார்த்ததும் போதாது!!! *”நாங்கள்”* சனிக்கிழமை இரவில்தான் பிறையைப் பார்த்தோம். எனவே *”நாங்கள்”* (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை *”நாங்கள்”* நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம். என்று மூன்று முறை நாங்கள் என்கிறார். இப்படிதான் நபி (()) கட்டளையிட்டர்கள் என்கிறார். “நீங்கள் பிறை பார்க்கும் வரை அல்லது நீங்கள் 30ஆக முழுமையாக்கும் வரை நோன்பு நோருங்கள்” என்று நபிகளார் கட்டளையிட்டது நமக்கு நன்றாகவே தெரியும். “நீங்கள்” பிறையை பார்க்கும்போது நோன்பு பிடியுங்கள். “உங்களுக்கு” மறைக்கப்பட்டால் 30 நாட்கள் நோன்பு பிடியுங்கள் என்றெல்லாம் நபிகளார் சொன்ன ஹதீஸ்களில் வந்துள்ள “நீங்கள் vs உங்கள்” ஆகிய வார்த்தைகளை இப்னு அப்பாஸ் இங்கே விளக்குகிறார்கள். இங்கே சாட்சி ஒரு பிரச்சனை இல்லை, சாட்சிகள் பலமாக உள்ளன.
மக்கள் நோன்பு நோற்கும் நாளே நோன்பு, மக்கள் நோன்பை விடும் நாளே பெருநாள் என்ற ஹதீசிற்கும் குறைப் ஹதீஸ் விளக்கமாக உள்ளது. இங்கே நீங்கள் - நாங்கள் என்று இப்னு அப்பாஸ் பிரிப்பது முஆவியா தலைமையில் இருக்கும் ஷாம் ஆட்சியையும் மதீனா ஆட்சியில் இருக்கும் மக்களையும்தான் என்பது இருவரின் உரையாடலில் தெளிவாக விளங்குகிறது
*தூரம்தான் பிரச்சனையா?*
உரையாடலை ஆய்வு செய்தால் பிறை தகவலை ஏன் இப்னு அப்பாஸ் எடுக்கவில்லை என்று விளங்கும். சாட்சிதான் போதவில்லையோ என்ற தோரணையில் குறைப் பேசுகிறார். ஆனால் இப்னு அப்பாஸ் பிறை பார்த்தலை பிரதானப்படுதிகிறார். குறிப்பாக நாங்கள் என்று மூன்று முறை சொல்கிறார். இங்கே “நாங்கள் – நீங்கள்”தான் பதிலாக உள்ளது . “நாங்கள் – நீங்கள்” யார்? யார்? தூரத்தில் இருப்பவரும் பக்கத்தில் இருப்பவருமா? இல்லை. “நாங்கள் – நீங்கள்” யார் யார் என்பதற்கு ஹதீசிலியே பதில் உள்ளது. முஆவியும் மக்களும் பார்த்த பிறை அவர்களுக்கு. நாங்கள் மதீனாவில் பார்க்கும் பிறை எங்களுக்கு என்கிறார் இப்னு அப்பாஸ். இடையே இருப்பது மதீனா – ஷாம் எனும் எல்லையே தவிர தூரமல்ல என்பது நடந்த சம்பவத்தில் வெள்ளிடைமலை.