بِسْــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
இரண்டாம் வசனம்: உர்ஜூனில் கதீம்
ஸூறா 36 யாஸீன் 39வது வசனம்
وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்zில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்.
ஜான் டிரஸ்ட் 36:39
இந்த வசனத்திலும் மன்zில் என்ற வார்த்தையே வந்துள்ளது. மன்zில்கள் என்ற வார்த்தைக்கு “படித்தரங்கள்” அல்லது “வளர்ந்து தேயும் நிலைகள்” என்று பொருள் கொள்வது பொருத்தமல்ல என்பதை ஏற்கனவே தேவையான அளவு அலசிவிட்டோம். இங்கேயும் மன்zில்களுக்கு அதே பொருள்தான். சந்திரனின் ராசிகளை கூறுகிறது. ஆனால் இங்கே முக்கியமாக நாம் பார்க்கவேண்டியது பழைய பேரீத்தங்குலையின் மட்டை எனும் வார்த்தையாகும். உர்ஜூனில் கதீம் என்று மூலத்தில் இருக்கும் இந்த வார்த்தைக்கு மாதத்தின் கடைசிநாளில் (28, 29) தெரியும் தேய்பிறைதான் என்று பொருள் செய்கின்றனர். இவர்கள் நாட்காட்டியிலும் கடைசி பிறையை உர்ஜூனில் கதீம் என்றே குறிப்பிட்டிருப்பர். இதற்கு கடைசி தேய் பிறை என்பதுதான் பொருளா? பார்ப்போம்
“மீண்டும் பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்zில்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்”. என்பது அழகான விளக்கத்தை தருகிறது. முதல் பிறையும் கடைசி பிறையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரித்தான் இருக்கும். இரண்டுமே பழைய பேரீச்சங்குலை பாளை போல்தான் இருக்கும். இங்கே தான் நாம் மீண்டும் அது பேரீச்சங்குலை பாளை போல் ஆகிவிடுகிறது என்ற வார்த்தை அமைப்பை ஆழமாக சிந்திக்க வேண்டும். மீண்டும் என்ற வார்த்தை இந்த மொழிப்பெயர்ப்பில் விடுபட்டுள்ளது. ஏற்கனவே ஒரு பொருள் அப்படி இருந்ததால்தான் மீண்டும் அப்படி ஆகிவிட்டது என்று கூற இயலும். எனில் ஏற்கனவே சந்திரன் ஒரு முறை பழைய பேரீச்சங்குலை பாளை போல் இருந்துள்ளது அது பல மன்ஸில்களை கடந்து மீண்டும் பழைய பேரீச்சங்குலைபாளை போன்ற நிலையை அடைகிறதென்றால் பழைய பேரீச்சங்குலைபாளை போல் என்பதற்கு என்ன பொருள். ஆம்! முதல் பிறைதான். அல்லாஹ் பழைய பேரிச்சம் குலை பாளை போல் என்று கூறும் உவமை முதல் பிறைக்குரியது. கடைசி பிறைக்கல்ல.
அல்லாஹ் சந்திரனின் மன்ஸில்களை பற்றி பேசுகிறான். படித்தரங்கள் பற்றி பேசவில்லை. ஒரு சுற்று முடிய வேண்டுமேனில் அது தொடங்கிய இடத்திற்கு வரவேண்டும். அப்போது தான் மீண்டும் என்ற வார்த்தை முழுமை பெறும். சந்திரன் முதல் பிறையில் உருஜூணில் கதீம் போல் ஆரம்பிக்கிறது. பல மன்ஸில்களை கடந்து மீண்டும் அதே நிலையை அடைகிறது. அது கடைசி பிறை எனில் கடைசி பிறைக்கும் முதல் பிறைக்கும் இடையே இருக்கும் 2 ராசிகளை அல்லாஹ் விட்டதுபோலாகும்.
இந்த வசனத்தில்தான் பலரும் குழம்பி விடுகின்றனர். மன்சில், வடிவம் என இரண்டையும் அல்லாஹ் இதில் இணைத்துப் பேசியுள்ளான். எனவே மன்சில் என்றால் வடிவம்தான் என்ற வாதத்தை வைக்கின்றனர். பல படித்தரங்களை கடந்து சந்திரன் உர்ஜூணில் கதீம் போல் ஆகிறது என்றுதான் பொருள் என்கின்றனர். சந்திரன் வளர்ந்து தேய்வதற்கு காரணம் அது பூமியை சுற்றுவது. சந்திரனுக்கு மன்சில்கள் (ராசிகள்) ஏற்படக் காரணமும் அது பூமியை சுற்றுவதுதான். இவை இரண்டிற்கும் மூல காரணம் சந்திரன் பூமியை சுற்றுவதுதான் என்றாலும் இவை இரண்டும் தொடர்பற்றவை. முதல் பிறையில் சந்திரன் ஒரு மன்ஸிலில் (ராசிநட்சத்திரத்தில்) இருக்கும் (உதா அல் ஹக்ஆ). இரண்டாம் பிறையில் சந்திரன் அடுத்த மன்ஸிலில் (ராசிநட்சத்திரத்தில்) இருக்கும் (உதா அல் ஹன்ஆ). மூன்றாம் பிறையில் சந்திரன் வேறொரு மன்ஸிலில் (ராசிநட்சத்திரத்தில்) இருக்கும் (அல் திரா). இப்படி ஓவொரு இரவிலும் சந்திரன் ஒவ்வொரு ராசி நாட்சதிரத்தில் இருக்கும். முதல் பிறையில் இருந்து அடுத்த முதல் பிறைவரையிலான சுழற்சியில் சந்திரன் பல ராசிகளை கடந்து செல்கிறது என்று விளங்குவதில் இவர்களுக்கு என்ன குழப்பம் என்று தெரியவில்லை.
"நான் சென்னை சென்றடையும் வரை ரயில் பல நிலையங்களில் நின்று சென்றது" இதில் நிலையம் என்றால் சென்னை என்று அர்த்தமா? முடிவில் நான் சென்று சேருமிடம் சென்னை. இடையிடையே ரயில் நிற்குமிடம் நிலையங்கள். இரண்டையும் குழப்பிக்கலாமா?. "நான் நாலு வீடு சாப்பாடு சாப்பிட்டு குண்டாயிட்டேன்" இங்கே வீடு என்றால் குண்டாவது என்று அர்த்தமா? சென்னை என்பது நான் சென்றடையும் ஊர். ரயில் நிலையம் என்பது ரயில் நிற்குமிடம் நான் குண்டனேன் என்பது எனது உருவம் 4 வீடுகள் என்பது நான் சென்று சாப்பிட்ட இடங்கள்
சந்திரன் அதன் ராசி சுழற்சியை சராசரியாக 27.32166 நாட்களில் முடித்துவிடும் ஆனால் பிறைச் சுழற்சியை முடிக்க சராசரி 29.53059 நாட்கள் ஆகும். இதனால் இம்மாதம் முதல் பிறையை நீங்கள் ஷரதானில் பார்த்தல் அடுத்த மாதம் நீங்கள் மீண்டும் ஷரதானில் பார்க்க மாட்டீர்கள். பதன் அல் ஹூத்-இல் பார்ப்பீர்கள்.
“மீண்டும் பழைய பேரீத்த மட்டையைப் (முதல் பிறை) போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்zில்களை (ராசிகளை) ஏற்படுத்தியிருக்கின்றோம்” என்பதே சரியான மொழியாக்கம்
சந்திரனின் பிறைகளுக்கும் ராசிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குகிறது இந்த வசனம். மேலும் சந்திரன் பூமியை சுற்றி வருகிறதெனும் விஞ்ஞான உண்மையையயும் வெளிப்படுத்துவதே இவ்வசனம். இந்த வசனத்தில் கணக்கீட்டுக்கு ஆதாரமோ. பிறைகள் தேதிகளை காட்டும் என்பதோ இல்லை.
الشرطان - aš-šaraṭān (or) النطح - an-naṭḥ
|
الغفر - al-ġafr
|
البطين - al-buṭayn
|
الزبانان - az-zubānān
|
الثريا - aṯ-ṯurayyā
|
الإكليل - al-iklīl
|
الدبران - al-dabarān
|
القلب - al-qalb
|
الهقعة - al-haqʿa
|
الشولة - aš-šawla
|
الهنعة - al-hanʿa
|
النعائم الواردة - an-naʿāʾim al-wārida (or) النعائم الصادرة - an-naʿāʾim aṣ-ṣādira
|
الذراع - aḏ-ḏirāʿ
|
البلدة - al-balda
|
النثرة - an-naṯra
|
سعد الذابح - saʿd aḏ-ḏābiḥ
|
الطرف - aṭ-ṭarf
|
سعد بلع - saʿd bulaʿ
|
الجبهة - al-ǧabha
|
سعد السعود - saʿd as-suʿūd
|
الزبرة - az-zubra
|
سعد الأخبية - saʿd al-aḫbīya
|
الصرفة - aṣ-ṣarfa
|
الفرع المقدم - al-farʿ al-muqaddam
|
العواء - al-ʿawwāʾ
|
الفرع المؤجر - al-farʿ al-muʾaḫḫar
|
السماك - as-simāk
|
بطن الحوت - baṭn al-ḥūt
|
மன்சில் என்ற அறபி வார்த்தை நபிகளாருக்கு முன்பே வழக்கத்தில் இருந்தது. நாம் சொல்லும் ராசி நட்சத்திரம் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. மக்கள் காலத்தை அளக்க அதை பயன்படுத்தினர். சூரியனுக்கும் சந்திரனுக்கும் மன்சில்கள் இருந்தன. இந்த வசனங்கள் இறங்கிய பின் மன்சில் என்றால் என்னவென்று மக்கள் கேட்டதாக தெரியவில்லை. "இத்தனை நாள் நாங்கள் நட்சத்திர கூட்டம் என்றுதானே நம்பி வந்தோம் இப்போது நீங்கள் படித்தரம் என்று சொல்கிறீர்களே " என்று மக்கள் மாநபியிடம் கேட்கவில்லை.
இவர்கள் எல்லா பிறையையும் பாருங்கள் குறிப்பாக உர்ஜூனில் கதீமை (கடைசி பிறையை) பாருங்கள் என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தில் இல்லாத விஷயங்கள். மேலே உள்ள வசனத்திற்கு “ஒரு முதல் பிறையிலிருந்து அடுத்த முதல் பிறை வரை சந்திரன்கள் பல மன்zில்களை (ராசி நட்சத்திரங்களை) கடந்து செல்கிறது” என்பதே பொருள். இதிலிருந்து கடைசிப்பிறையைப் பார்க்கவேண்டும் என்பதும் அதன் அடுத்தநாள் சங்கம நாள், அதற்கும் அடுத்த நாள் மாதத்தின் முதல் நாள் என்பதும் இவர்களின் கற்பனை வாதங்களே! கணக்கிட்டு இபாதத் செய்யலாம் எனும் வாதத்திற்கும் இந்த வசனத்தில் எந்த அடிப்படையும் இல்லை.
மூன்றாம் வசனம்: அஹில்லதி
அல்குர்ஆன் : 2:189
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ، قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ، وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ، وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا، وَاتَّقُوا اللَّـهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
டாக்டர். முஹம்மது ஜான்
இதில் வரும் பிறைகள் எனும் சொல்லை ‘முதல் பிறை’ ‘இரண்டாம் பிறை’ ‘மூன்றாம் பிறை’ எனும் மாதத்தின் உள்பகுதியாக இருக்கும் பிறைநாட்களை குறிப்பதாக பலரும் மொழிபெயர்த்து அப்படியே விளங்கியும் விளக்கியும் வருகின்றனர். ஆனால் ஆங்கில மொழிப்பெயர்ப்பளர்கள் அனைவரும் இதை “தலைப்பிறைகள்” என்றே மொழிப்பெயர்துள்ளத்தைக் காணலாம்.
இங்கேயும் வார்த்தையை அப்படியே மொழிபெயர்த்து விட்டு மொழிபெயர்ப்பை வைத்து வியாக்கியானம் கொடுக்கிறது இந்தக்கூட்டம். ஒரு வார்த்தை அந்த மொழியில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்று பார்க்க வேண்டும். இங்கே அஹில்லா எனும் வார்த்தை அக்காலத்தில் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று பார்க்க வேண்டும்.
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ، رُومَانَ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا كَانَتْ تَقُولُ وَاللَّهِ يَا ابْنَ أُخْتِي إِنْ كُنَّا لَنَنْظُرُ إِلَى الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثُمَّ الْهِلاَلِ ثَلاَثَةَ أَهِلَّةٍ فِي شَهْرَيْنِ وَمَا أُوقِدَ فِي أَبْيَاتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم نَارٌ - قَالَ - قُلْتُ يَا خَالَةُ فَمَا كَانَ يُعَيِّشُكُمْ قَالَتِ الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ إِلاَّ أَنَّهُ قَدْ كَانَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جِيرَانٌ مِنَ الأَنْصَارِ وَكَانَتْ لَهُمْ مَنَائِحُ فَكَانُوا يُرْسِلُونَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَلْبَانِهَا فَيَسْقِينَاهُ .
صحيح مسلم ٢٩٧٢/٣
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள்.
முஸ்லிம் : 5690, புகாரீ 2567 & புகாரீ 6459
இதில் அன்னை ஆயிஷா அஹில்லா எனும் அதே வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்கள் அஹில்லா என்பதை தலைப்பிறைகள் எனும் பொருளில் பயன்படுத்துகிறார்கள். “மனாசிலுல் கமர்” மற்றும் “அஹில்லா” இவற்றிக்கு பிறையின் படித்தரங்கள் என்ற பொருள் இல்லவே இல்லை.
இங்கு பிறைகள் எனப்படுவது முதல் பிறைகளை மட்டுமே குறிக்கும். முதல் பிறைகளை மட்டுமே அல்லாஹ் காலம் காட்டிகள் என்று கூறுகின்றான். முதல் பிறை மட்டுமே மாதத்துவக்கதை காட்டி அதன் மூலம் மாதங்களின் கணக்கை காட்டும். ஒரு பிறையை பார்த்துவிட்டு இது இரண்டாம் நாள் பிறை இது மூன்றாம் நாள் பிறை என்று யாராலும் கூற இயலாது. அப்படி கூற வேண்டுமெனில் எல்லா முதல் பிறைகளும் அளவில் ஒன்றாக இருக்கவேண்டும். எல்லா இரண்டாம் பிறைகளும் அளவில் ஒன்றாக இருக்கவேண்டும். எல்லா மாதமும் பௌர்ணமி 15ஆம் நாளில் வரவேண்டும். இது நடப்பதில்லை. இதற்கான நடைமுறை விளக்கத்தை பார்ப்போம்.
வளர்ந்து தேயும் பிறைகளும் இவர்கள் கூறுவதைப்போல் சர்வதேச தேதியை காட்டுவதில்லை என்பதை இங்கே நிறுவியுள்ளோம்.. பார்க்க http://hafsa13.blogspot.com/2016/02/11.html
பிறையின் அளவை அதன் வீதியை வைத்து arc second எனும் அளவையில் விஞ்ஞானிகள் அளக்கிறார்கள். ஆனால் மக்களிடம் அதிகமாக பிரபலம் ஆனது அது எத்தனை சதவிகிதம் ஒளியூட்டப்பட்டுள்ளது அன்ற அளவீடுதான். அதையே நாமும் இங்கே தந்துள்ளோம். கீழே நாட்களும் நேரமும் ஹிஜ்ரி கமிட்டி காரர்களுக்கு பிடித்த சர்வதேச நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அமாவாசை அன்றிலிருந்து இரவு ஏழுமணிக்கு ஒருவர் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பிறை பார்க்கிறார் என்று வைத்துகொள்வோம் அவர் 2015 ஆம் ஆண்டில் ஒவ்வொரு சந்திர மாதமும் பின்வரும் அளவிலுள்ள பிறைகளை பார்த்திருப்பார். அமாவாசை ஏற்படும் நாள், அதன் அடுத்த நாள் முதல் பிறை, அதன் அடுத்த நாள் இரண்டாம் பிறை எனும் ஹிஜ்ரி கமிட்டி கோட்பாட்டிற்கு இணங்கவே இதை உருவாக்கியுள்ளேன்.
ஜமாதில் அவ்வல் மாதத்தின் முதல் பிறை 1.04% அளவு உள்ளது
ஜமாதில் ஆகிர் மாதத்தின் முதல் பிறை 2.93% அளவு உள்ளது
ஷஅஂபான் மாதத்தின் முதல் பிறை 3.49% அளவு உள்ளது
இவை எல்லாமே முதல் பிறைதான் ஆனால் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. அல்லாஹ் பிறையின் படித்தரங்களை இப்படி மாற்றுகையில் அதை வைத்துகொண்டு பிறையின் படித்தரத்தை வைத்து பிறைநாளை எப்படி தெரிந்துகொள்ள முடியும்.
ஷஅஂபான் மாதத்தின் இரண்டாம் பிறை 8.49% அளவு உள்ளது தில் கஅதா மாதத்தின் இரண்டாம் பிறையோ 4.33%; கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அளவில் வித்தியாசம். ஒரு மாதத்தின் இரண்டாம் பிறையை விட வேறொரு மாதத்தின் இரண்டாம் பிறை இரண்டு மடங்கு அளவில் பெரிதாக உள்ளது. இப்படி இருக்கையில் பிறையின் அளவை வைத்து அது இந்த நாளை குறிக்கிறது என்று எப்படி சொல்ல இயலும்.
மாதம்
|
பிறை நாள்
|
வருடம்
|
மாதம்
|
நாள்
|
மணி
|
நிமி
|
பிறையின் அளவு
|
அமாவாசை
|
2015
|
1
|
20
|
19
|
0
|
0.25%
| |
4. ரபி உல் ஆகிர்
|
முதல் பிறை
|
2015
|
1
|
21
|
19
|
0
|
2.39%
|
இரண்டாம் பிறை
|
2015
|
1
|
22
|
19
|
0
|
7.35%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
1
|
23
|
19
|
0
|
14.77%
| |
அமாவாசை
|
2015
|
2
|
18
|
19
|
0
|
0.16%
| |
5. ஜமாதில் அவ்வல்
|
முதல் பிறை
|
2015
|
2
|
19
|
19
|
0
|
1.04%
|
இரண்டாம் பிறை
|
2015
|
2
|
20
|
19
|
0
|
4.90%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
2
|
21
|
19
|
0
|
11.38%
| |
அமாவாசை
|
2015
|
3
|
20
|
19
|
0
|
0.25%
| |
6. ஜமாதில் ஆகிர்
|
முதல் பிறை
|
2015
|
3
|
21
|
19
|
0
|
2.93%
|
இரண்டாம் பிறை
|
2015
|
3
|
22
|
19
|
0
|
8.28%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
3
|
23
|
19
|
0
|
15.78%
| |
அமாவாசை
|
2015
|
4
|
18
|
19
|
0
|
0.02%
| |
7. றஜப்
|
முதல் பிறை
|
2015
|
4
|
19
|
19
|
0
|
1.52%
|
இரண்டாம் பிறை
|
2015
|
4
|
20
|
19
|
0
|
5.64%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
4
|
21
|
19
|
0
|
11.93%
| |
அமாவாசை
|
2015
|
5
|
18
|
19
|
0
|
0.64%
| |
8. ஷஅஂபான்
|
முதல் பிறை
|
2015
|
5
|
19
|
19
|
0
|
3.49%
|
இரண்டாம் பிறை
|
2015
|
5
|
20
|
19
|
0
|
8.49%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
5
|
21
|
19
|
0
|
15.21%
| |
அமாவாசை
|
2015
|
6
|
16
|
19
|
0
|
0.23%
| |
9. றமதான்
|
முதல் பிறை
|
2015
|
6
|
17
|
19
|
0
|
1.84%
|
இரண்டாம் பிறை
|
2015
|
6
|
18
|
19
|
0
|
5.53%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
6
|
19
|
19
|
0
|
11.00%
| |
அமாவாசை
|
2015
|
7
|
16
|
19
|
0
|
0.69%
| |
10. ஷவ்வால்
|
முதல் பிறை
|
2015
|
7
|
17
|
19
|
0
|
3.11%
|
இரண்டாம் பிறை
|
2015
|
7
|
18
|
19
|
0
|
7.34%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
7
|
19
|
19
|
0
|
13.11%
| |
அமாவாசை
|
2015
|
8
|
14
|
19
|
0
|
0.10%
| |
11. தில் கஅதா
|
முதல் பிறை
|
2015
|
8
|
15
|
19
|
0
|
1.31%
|
இரண்டாம் பிறை
|
2015
|
8
|
16
|
19
|
0
|
4.33%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
8
|
17
|
19
|
0
|
8.99%
| |
அமாவாசை
|
2015
|
9
|
13
|
19
|
0
|
0.24%
| |
12. தில் ஹிஜ்ஜா
|
முதல் பிறை
|
2015
|
9
|
14
|
19
|
0
|
2.06%
|
இரண்டாம் பிறை
|
2015
|
9
|
15
|
19
|
0
|
5.62%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
9
|
16
|
19
|
0
|
10.78%
| |
அமாவாசை
|
2015
|
10
|
13
|
19
|
0
|
0.62%
| |
1. முஹர்ரம்
|
முதல் பிறை
|
2015
|
10
|
14
|
19
|
0
|
3.03%
|
இரண்டாம் பிறை
|
2015
|
10
|
15
|
19
|
0
|
7.20%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
10
|
16
|
19
|
0
|
13.06%
| |
அமாவாசை
|
2015
|
11
|
11
|
19
|
0
|
0.12%
| |
2. சஃபர்
|
முதல் பிறை
|
2015
|
11
|
12
|
19
|
0
|
1.25%
|
இரண்டாம் பிறை
|
2015
|
11
|
13
|
19
|
0
|
4.35%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
11
|
14
|
19
|
0
|
9.35%
| |
அமாவாசை
|
2015
|
12
|
11
|
19
|
0
|
0.33%
| |
3. ரபி உல் அவ்வல்
|
முதல் பிறை
|
2015
|
12
|
12
|
19
|
0
|
2.20%
|
இரண்டாம் பிறை
|
2015
|
12
|
13
|
19
|
0
|
6.24%
| |
மூன்றாம் பிறை
|
2015
|
12
|
14
|
19
|
0
|
12.38%
|
இவர்கள் சொல்லும் மற்றொரு வாதம் “நாங்கள் பிறையை பார்க்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லா பிறையையும் பாருங்கள் என்று தான் சொல்கிறோம். குறிப்பாக கால்பிறை பௌர்ணமி முக்கால் பிறை மற்றும் உர்ஜூனில் கதீம் ஆகியவற்றை பாருங்கள். அவைகள் சரியாக மாதத்தின் நாட்களை காட்டும்”. இதில் உர்ஜூனில் கதீமின் நிலையை ஏற்கனவே விளக்கிவிட்டோம். இனி கால், முழு மற்றும் முக்கால் பிறைகள் நாட்களை காட்டுகின்றனவா என்று பார்ப்போம்.
இவர்களின் குவாட்டர் கணக்குகளையும் துல்லியமான பிறை வடிவங்களுடன் இங்கே விளக்கி இருக்கிறோம்.. பார்க்க http://hafsa13.blogspot.com/2016/02/11.html
கீழேயுள்ள அட்டவணையில் 2016ம் ஆண்டில் பிறையின் படித்தரங்களையும் அவை எந்த பிறை நாளில் ஏற்படுகிறது எந்த தகவலையும் பட்டியலிட்டுள்ளோம். ஒரு மாதம் கால்பிறை 6 வது நாளில் ஏற்பட்டால் மற்றொரு மாதம் 7ம் நாளிலும் பிறிதொரு மாதம் 8ம் நாளிலும் ஏற்படுகிறது. முழுநிலவு 14, 15 & 16 ஆகிய நாட்களில் ஏற்படுகின்றன. முக்கால் பிறையோ 21, 22 & 23 ஆகிய நாட்களில் ஏற்படுகின்றன.
மாதம்
|
அமாவாசை
|
கால்பிறை
|
ஏற்படும் நாள்
|
முழுநிலவு
|
ஏற்படும் நாள்
|
முக்கால்பிறை
|
ஏற்படும் நாள்
|
4. ரபி உல் ஆகிர்
|
10-Jan
|
16-Jan
|
6
|
24-Jan
|
14
|
01-Feb
|
22
|
5. ஜமாதில் அவ்வல்
|
08-Feb
|
15-Feb
|
7
|
22-Feb
|
14
|
01-Mar
|
21
|
6. ஜமாதில் ஆகிர்
|
09-Mar
|
15-Mar
|
6
|
23-Mar
|
14
|
31-Mar
|
22
|
7. றஜப்
|
07-Apr
|
14-Apr
|
7
|
22-Apr
|
15
|
30-Apr
|
23
|
8. ஷஅஂபான்
|
06-May
|
13-May
|
7
|
21-May
|
15
|
29-May
|
23
|
9. றமதான்
|
05-Jun
|
12-Jun
|
7
|
20-Jun
|
15
|
27-Jun
|
22
|
10. ஷவ்வால்
|
04-Jul
|
12-Jul
|
8
|
19-Jul
|
15
|
26-Jul
|
22
|
11. தில் கஅதா
|
02-Aug
|
10-Aug
|
8
|
18-Aug
|
16
|
25-Aug
|
23
|
12. தில் ஹிஜ்ஜா
|
01-Sep
|
09-Sep
|
8
|
16-Sep
|
15
|
23-Sep
|
22
|
1. முஹர்ரம்
|
01-Oct
|
09-Oct
|
8
|
16-Oct
|
15
|
22-Oct
|
21
|
2. சஃபர்
|
30-Oct
|
07-Nov
|
8
|
14-Nov
|
15
|
21-Nov
|
22
|
3. ரபி உல் அவ்வல்
|
29-Nov
|
07-Dec
|
8
|
14-Dec
|
15
|
21-Dec
|
22
|
பிறையின் எந்த படித்தரத்தை பார்த்தும் அது இந்த நாளுக்குரிய பிறை என்று சொல்லவே இயலாது. பிறையின் படித்தரத்தை பார்த்து நாட்களை அறிந்தார்கள் என்பதற்கு நபிகள் நாயகம் கால வரலாற்றில் எந்த சான்றும் இல்லை. மாறாக அவர்களால் பிறைகளை பார்த்து நாட்களை அறிய முடியவில்லை என்பதற்கு முஸ்லிம் 1984 வது ஹதீஸ் சான்றாக உள்ளது. பார்க்க (http://hafsa13.blogspot.com/2015/07/19-1.html). பிறையின் படித்தரத்தை பார்த்து நபி ஸல் கணக்கிட்டார்கள் என்பது நபிகளார் மீது இட்டுக்கட்டிய பாவமாகும். குறிப்பாக உர்ஜூனில் கதீம் என்றால் கடைசி தேய்பிறை என்பதும் அதை பார்த்துவிட்டு அதன் அடுத்த நாள் கும்ம-வின் நாள் என முடிவுசெய்தார்கள் என்பது ஆதாரமற்றது.
பிறையின் படித்தரங்கள் நாட்களை காட்டும் என்பதை குர்ஆன் சொல்லவுமில்லை. பிறையின் படித்தரங்கள் நாட்களை காட்டவுமில்லை. முதல் பிறை மாத துவக்கத்தை காட்டும். ஒரு நாள் என்பதை காட்டுவது சூரியனே. முதல் பிறையிலிருந்து ஒவ்வொருநாளாக சூரிய மறைவைக்கொண்டு எண்ணிவரவேண்டும் 29வது பகல் முடிந்து வரும் இரவில் மீண்டும் பிறையை தேடவேண்டும். பிறை தெரிந்தால் அடுத்த நாள் அடுத்த மாதத்தின் முதல் நாள். இப்படிதான் சூரியனும் சந்திரனும் காலத்தை காட்டுகின்றன. ஒரு நாளையும் அதன் உட்பகுதிகளையும் காட்டுவது சூரியன். மாதத்தை காட்டுவது சந்திரன். 12மாதங்கள் ஒரு வருடம். இதுவே இஸ்லாமிய நாட்காட்டி. இப்படித்தான் நபி ஸல் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் கீழே:
நபி (ஸல்) அவர்கள் ஏனைய மாத(தலைப்பிறை)ங்களுக்கு வழங்காத முக்கியத்துவத்தை ஷஅபான் தலைப்பிறைக்கு வழங்குபவர்களாக இருந்தார்கள். பிறகு ரமலானின் பிறையை கண்ணால் கண்டு நோன்பு நோற்பார்கள். அவர்களுக்கு மறைக்கப்பட்டால் முப்பதாக கணக்கிட்டு பிறகு நோன்பு நோற்பார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : அஹ்மத் (25202)
மேலும் இவர்கள் பின்வரும் வசனங்களையும் ஆதாரமாக காட்டுகின்றனர். 17:12ஆம் வசனத்திற்கு விளக்கமாக 10:5 வசனம் உள்ளதையும் ஏற்கனவே அலசிவிட்டோம். பின்வரும் வசனங்களில் சூரியனும் சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன என்ற ஒரு கருத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அவை கணக்கின்படி இயங்குவதால் நாம் கணக்கிட்டு இபாதத் செய்யலாம் என்பது அறிவுடைமையல்ல. கணக்கின் படி இயங்குகின்றன என்பது இறைவன் தன் ஆளுமையையும் தன் அதிகாரத்தையும் பறைசாற்றுவதற்குரிய வசனமாகும். தன் அத்தாட்சிகள் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கவேண்டும் என்பதற்கும் சான்றுகள் ஆகும். அந்த கணக்கை நாம் படிக்க இயலுமா என்றால்! இயலும்! அந்த கணக்கை நாம் படித்தால், உண்மையை அறியும் நோக்குடன் நடுநிலைமையோடு படித்தால், கணக்கிட்டு பின்பற்றினால் ஏற்படும் விளைவுகளை இவர்கள் அறிந்துகொள்வார்கள். அல்லாஹ் இட்ட சந்திரனின் கணக்குகள் பூமிக்கு இரு வேறு சந்திர மாதங்களை வழங்குகின்றன. பூமியின் ஒரு பகுதிக்கு அது 29நாட்கள் கொண்ட மாதத்தையும் மறு பகுதிக்கு 30நாள் கொண்ட மாதத்தையும் அது வழங்குகிறது. இதுவே இறைவன் கூறும் கணக்கு. மேலும் இக்கணக்கு சந்திர மாதத்தில் ஒரு கிழமைக்கு இரண்டு தேதிகள் இருக்கும் எனும் சத்தியத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது.
அந்த கணக்கை பின்வரும் கட்டுரைகளில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்
3) சர்வதேச பிறை - ஒரு விஞ்ஞான ஆய்வு >> http://hafsa13.blogspot.com/2014/12/Universal-Hilail-An-Astronomical-Analysis.html
அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (அல்குர்ஆன் : 39:5)
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள். (அல்குர்ஆன் : 36:37)
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது; இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். (அல்குர்ஆன் : 36:38)
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் : 36:40)
அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதிபெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் - இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். (அல்குர்ஆன் : 6:96)
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (அல்குர்ஆன் : 55:5)
இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 17:12)
(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன; அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். (அல்குர்ஆன் : 13:2)
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் - ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 9:36)
(போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான். (அல்குர்ஆன் : 9:37)
குறிப்பு: ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பையும் வேறு எந்த மொழிபெயர்ப்பையும் நான் இங்கு குறை கூறவோ விமர்சனம் செய்யவோ இல்லை. குர்ஆனில் அறிவியலின் பல பிரிவுகளை பற்றி அல்லாஹ் பேசுகிறான். விண்ஞானம், புவியியல், உடலியல், கருவியல்.... மற்றும் பல.... இவை அனைத்தையும் அறிந்திருந்தால் மட்டுமே அந்த அந்த வசனத்திற்கு தக்க விளக்கம் அளிக்க முடியும். மார்க்கத்தில் நல்ல ஞானமுள்ளவர்கள் அறிவியலில் அதே அளவு ஞானம் உடையவர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே இவற்றை அவர்களது மொழிபெயர்ப்புகளில் இருக்கும் குறையாக காணாமல் அவர்களது சிறந்த பணிக்குரிய நன்மையை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவேண்டும் என்று பிரார்த்தித்துவிட்டு சரியான ஞானத்தை தேடுபவர்களாக பயணிப்போம்......